போதிய வருமானமும், போதிய மூலதனமும் இல்லாமல் நிதி நிலை மோசமடைந்து வரும் வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், அசாம் மாநிலம் தேஜ்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தி மகாபைரப் கூட்டுறவு நகர்ப்புற வங்கியின் மோசமான நிதி நிலைமை காரணமாக, அதன் உரிமத்தை ரத்து செய்வதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (ஜூலை 24, 2024) வணிக நேரம் முடிவடைந்ததும், அதன் அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டன. மேலும், அசாம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமும் வங்கியை மூடுவதற்கான உத்தரவை வெளியிடவும், ஒரு கலைப்பாளரை நியமிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தி மகாபைரப் கூட்டுறவு நகர்ப்புற வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, தற்போதைய நிதி நிலைமையில் வைப்பாளர்களுக்கு முழுமையாக பணம் செலுத்த முடியாது என்றும், எனவே வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால், வாடிக்கையாளர்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க:
பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன தெரியுமா? ஒரு ரூபாய் கொடுத்தால் இவ்வளவு கிடைக்கும்!
வங்கியை கலைக்கும்போது ஒவ்வொரு டெபாசிட்தாரரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். கூட்டுறவு வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, சுமார் 99.8 சதவீத டெபாசிட்தாரர்கள் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், அவர்களது முழு பணமும் காப்பீடு மூலம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
