சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு அமைப்பு மற்றும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து இம்மாதம் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் தக்காளி, வெண்டைக்காய், பாயாம் எனும் ஒரு வகை கீரை போன்ற உணவுப் பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூர் உணவு ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

