சமீபத்தில், ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியல் 2024 வெளியிட்டது. இந்தப் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவி லிவியா வோய்க்ட், உலகின் இளம் கோடீஸ்வரர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். லிவியா இன்னும் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஜூலை 10ஆம் தேதி அன்று 20 வயதை எட்டினார். ஃபோர்ப்ஸ் படி, அவரின் நிகர மதிப்பு ரூ.10,020 கோடி (ஜூலை 16 வரை) ஆகும். இந்த பட்டியலில் 25 இளம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த இளைஞர்களின் வயது 33 அல்லது அதற்கும் குறைவானது.
பிரேசிலின் சிறந்த மோட்டார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான WEG, லிவியா வோய்க்ட்டின் தாத்தா வெர்னர் ரிக்கார்டோ வோய்க்ட் என்பவரால் நிறுவப்பட்டாலும், லிவியாவிற்கு நிறுவனத்திலும் சிறுபான்மை பங்குகள் உள்ளன. லிவியா வோய்க்ட் இன்னும் நிறுவனத்தின் குழுவின் ஒரு பகுதியாக இல்லை அல்லது நிறுவனத்தில் எந்த உயர் பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் அவர் நிறுவனத்தில் 3.1 சதவீத பங்குகளை வைத்திருப்பதாகவும், ஈவுத்தொகை மூலம் மில்லியன் கணக்கில் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் தற்போது ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின் படி, உலகின் 2,468வது இடத்தில் உள்ளார். லிவியா தற்போது பிரேசிலின் புளோரியானோபோலிஸில் வசிக்கிறார். ஃபோர்ப்ஸ் படி, பிரேசிலில் வசிக்கும் லிவியா தற்போது கல்லூரி மாணவி ஆவார். அவர் பல்கலைக்கழகத்தில் சைகாலஜி (psychology) படித்து வருகிறார். இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் லிவியாவின் மூத்த சகோதரியான 26 வயதான டோரா வோய்க்ட் டி அசிஸும் இடம்பெற்றுள்ளார்.
லிவியாவைப் போலவே, டோராவும் WEGஇல் 3.1 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளார். அவரும் இதுவரை நிறுவனத்தில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. டோரா தனது ஆர்கிடெக்சூர் (architecture) பட்டத்தை 2020ல் பெற்றார். எஸ்சிலர் லக்சோட்டிகாவின் வாரிசான கிளெமென்ட் டெல் வெச்சியோவிடம் இருந்து லிவியா வோய்க்ட் இளைய கோடீஸ்வரர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதையும் படிக்க:
இந்தியாவின் டாப் 3 வங்கிகள் வெளியிட்டுள்ள சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த நிறுவனத்தை அவரது தாத்தா வெர்னர் ரிக்கார்டோ வோய்க்ட், மறைந்த கோடீஸ்வரர்களான எகோன் ஜோவா டா சில்வா மற்றும் ஜெரால்டோ வெர்னிங்ஹாஸ் ஆகியோருடன் இணைந்து நிறுவினார். மேலும் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் அதன் வருவாய் சுமார் 6 பில்லியன் டாலர்கள் (ரூ.50 ஆயிரம் கோடிகளுக்கு மேல்) வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
PM கிசான் AI சாட்போட் என்றால் என்ன..? இந்த திட்டத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? – விவரம்
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் மொத்தம் 2,781 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை 141% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அதிக பில்லியனர்கள் உள்ளனர். மேலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டு அமெரிக்காவில் 813 பில்லியனர்களும், சீனாவில் 473 பில்லியனர்களும், இந்தியாவில் 200 பில்லியனர்களும் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
