சிங்கப்பூர்: சிங்கப்பூர் கப்பலொன்றில் போதைப்பொருள் கடத்த முயன்றவர்களை தடுத்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ரியாவ் தீவுகளில் நடந்தது.
சிங்கப்பூரின் லெஜண்ட் அகுரிஸ் கப்பலில் சுமார் 106 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது.
கப்பலில் சிங்கப்பூர் பணி அனுமதி பெற்ற மூன்று பேர் இருந்தனர். மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

