அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!!
சிங்கப்பூர்: கடனை திருப்பிக் கேட்டு அதிக தொந்தரவு கொடுத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜூலை 5 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர், ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள ஒரு வீட்டின் நுழைவாயிலுக்கு வெளியே மிரட்டல் கடிதத்தை விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் அடையாளத்தை போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் அதிகாரிகள் கண்டறிந்தனர்.அவர் காவல்துறையால் ஜூலை 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதே இளைஞன் வேறு கடன் அச்சுறுத்தல்கள் போன்ற பிற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை ஜூலை 16-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Follow us on : click here
The post அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!! appeared first on SG Tamilan.

