அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா ஹில் என்ற இளம்பெண், இளைஞர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் அவருடன் பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டார். திடீரென ஒருநாள் அந்த இளைஞர், விக்டோரியா ஹில்லுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை கொடுத்தது. ஆம்! அவர் அனுப்பிய செய்தியில், “இருவரது மரபணுக்களையும் சோதித்து பார்த்தபோது, நீ எனக்கு சகோதரி என்பது தெரியவந்துள்ளது” என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட இளம்பெண்ணுக்கு அப்போதுதான் புரிந்தது. அதாவது, இளைஞரும், விக்டோரியாவும் செயற்கை கருவுறுதல் மூலம் பிறந்தவர்கள். ஆனால், இருவருக்குமே இது ஆரம்பத்தில் தெரியாது.
இவர்களது தாய்களுக்கு மருத்துவம் பார்த்தவர் ஒரே மருத்துவர். டாக்டர் பார்டன் கேட்வெல் என்ற அந்த மருத்துவர், கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் விந்தணு தானம் கொடுத்ததாகக் கூறி, தனது விந்தணுக்களையே அனைத்து நோயாளிகளுக்கும் கொடுத்துள்ளார். அதாவது, அவரே விந்தணு வங்கியாக மாறி, தனது நோயாளிகளுக்கு மறைமுகமாக விந்தணு தானம் செய்துள்ளார். விக்டோரியாவின் தாய்க்கும், அவரது காதலனின் தாய்க்கும் இவரே விந்தணு தானம் செய்துள்ளார். இப்போது மரபணு சோதனை செய்தபோது, இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இதனால், மிகவும் உடைந்து போன விக்டோரியா, எனது சகோதரனுடன் உறவில் இருந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், நான் யாரைப் பார்த்தாலும், என் சகோதரியோ, சகோதரனோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் அவர் வேதனையைப் பகிர்ந்துள்ளார். ஏனெனில், டாக்டர் பார்டன் கேட்வெல் இதுவரை 23 குழந்தைகளின் பிறப்புக்கு காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:
நாய்களை ரேப் செய்து கொலை செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை.. விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்
அந்த மருத்துவர் தற்போது ஓய்வுபெற்று விட்ட நிலையில், அவர் மீது வழக்கு தொடுக்கலாம் என விக்டோரியா நினைத்தார். ஆனால், அமெரிக்காவில் கருவுறுதல் மோசடிக்கு எதிரான தெளிவான சட்டங்கள் இல்லை என்பதால், அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
