நிலவில் குகை இருப்பதை முதன் முறையாக கண்டுபிடித்த விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் மனிதர்கள் அங்கு தங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிலவில் நாசா மேற்கொண்ட காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் குகை இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலவில் தங்கி ஆய்வு செய்வதற்கு, அதன் சுற்றுப்புறம், வெப்பம் உள்ளிட்டவை முக்கிய சவால்களாக பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில், நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகை மூலம், அங்கேயே தங்கி ஆய்வு செய்யும் சூழலை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
