இந்தியாவில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், விவசாயிகளுக்கு பொருளாதார பலன்களை வழங்குவதற்காக, பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இது ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் 17ஆவது தவணைத் தொகை கடந்த மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டில் 12 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர். இத்திட்டத்தின் அடுத்த தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், இந்த தவறுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தவணைத் தொகையை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களை தொடர்ந்து பெற e-KYC செய்வது முக்கியம். இது குறித்து ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்து விட்டது. ஆனால், இதை செய்யாத விவசாயிகள் இன்னும் பலர் இருக்கின்றனர். எனவே, e-KYC செய்யாத விவசாயிகள் அடுத்த தவணைத் தொகையை பெறுவதில் சிக்கலை சந்திக்கலாம். எனவே, உடனடியாக e-KYC செய்வது மிகவும் நல்லது.
அதேபோல், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விவசாயிகள் தங்கள் நில சரிபார்ப்பை பெற வேண்டும். இதுவரை நிலம் சரிபார்ப்பு செய்யாத விவசாயிகளுக்கும் இந்த தவணைத் தொகை நிறுத்தப்படலாம். எனவே, நிலம் சரிபார்ப்பு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க வேண்டும். அடுத்த தவணைத் தொகையை விடுவிப்பதற்கு முன்பு, இந்த வேலையை தாமதமின்றி செய்து முடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: நாய்களை ரேப் செய்து கொலை செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை.. விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்
e-KYC செய்ய விவசாயிகள் தங்களது செல்போனில் PM kisan app பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது pmkisan.gov.in இணையதளத்திற்கு சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு சென்று e-KYC செய்து கொள்ளலாம். இதை முடித்தால் மட்டுமே பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் தவணைத் தொகை கிடைக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
