Last Updated : 13 Jul, 2024 08:49 AM
Published : 13 Jul 2024 08:49 AM
Last Updated : 13 Jul 2024 08:49 AM

ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் இதில் இருந்து மீண்டு அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளும் 4-வது ஆட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.இதனால் ஷுப்மன் கில் தலைமையிலான வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்கும்.தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் அனைத்துதுறையிலும் ஜிம்பாப்வே அணி உயர்மட்டசெயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
FOLLOW US
தவறவிடாதீர்!


&w=1200&resize=1200,675&ssl=1)