சேலம் என்றாலே மாம்பழம் தான் ஃபேமஸ் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போ சேலம் பலாப்பழத்திற்கும் பேமஸாகி வருகிறது. வழக்கமாகப் பலாப்பழ சீசன் சித்திரையில் தொடங்கி ஆடியில் நிறைவடையும். அந்த சமயங்களில் பல இடங்களிலும் பலாப்பழ விற்பனை களைகட்டும்.
ஏற்காட்டில் 5 ஆயிரம் ஏக்கரில் பலாப்பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் நல்ல விளைச்சல் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலாப்பழத்திற்கு பண்ருட்டி பெயர் பெற்றதாக இருந்தாலும் ஏற்காட்டில் விளையும் பலாப்பழத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மற்ற இடத்தில் விளையும் பழ ரகங்களை விட ஏற்காட்டில் விளையும் பலாப்பழம் சுவை மிகுந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பலா வகைகளில் மஞ்சள், சிவப்பு , ரோஸ், வெள்ளை என நான்கு வகை உள்ளது. இந்த ரகத்தின் வேறுபாடு மேல் தோலில் தெரியாது பலாப்பழத்தின் சுளையில் தான் இந்த வேறுபாடு தெரியும்.
இதையும் படிங்க: கல்யாணத்தைக் கெடுக்க நினைக்கிறியே… போஸ்டர் ஒட்டி புலம்பிய 90ஸ் கிட்ஸ்…
வெள்ளை, மஞ்சள் நிறத்தில் காணப்படும் பலாச்சுளைகள் இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை. இதில் எவ்வித செயற்கை உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுவதாகும். இந்த வெள்ளை, மஞ்சள் நிற பழங்களுக்கு மரங்களின் கிளைகளிலிருந்து உதிரும் இலைகளே உரமாகும். இதனால் எந்தவித செயற்கை உரங்களும் அளிக்கப்படுவதில்லை. இதனால் இது இயற்கை முறையில் விளைவதால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
மற்ற ரோஸ், சிவப்பு நிற ரகங்கள் செயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது இது பார்ப்பவர்கள் கண்களுக்கு கவர்ச்சியாக ஆக தெரியும். ஆனால் இதனை உட்கொள்வதால் உடலுக்கு நன்மை எதுவும் இல்லை. இயற்கை முறையில் விளையும் பலா வகைகளை மக்கள் வாங்கி உட்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
