ராகுல் டிராவிட்டை கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்று பலரும் வர்ணிக்கிறார்கள். இதனை நிரூபிக்கும் வகையில், மீண்டும் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் டிராவிட்.
அண்மையில் பார்படாஸில் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. இந்த அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் ராகுல்டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாயும், மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாயும் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகையான 5 கோடி ரூபாயில் மற்ற பயிற்சியாளர்களைப் போல தமக்கும் இரண்டரை கோடி ரூபாய் போதும் என்று ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் இந்த செயல் கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சர்ச்சைகளில் பெரிய அளவில் சிக்காத ராகுல்டிராவிட், நிதான குணத்துக்கு பெயர் பெற்றவராவார். பொறுமைக்கு உதாரணமான ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்றும் வர்ணிக்கப்பட்டவர்.
இதையும் படிங்க – விராட் கோலி போட்ட ஒற்றை போஸ்ட்.. ஆசிய அளவில் சாதனை.. என்ன தெரியுமா?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மிகவும் த்ரில்லிங்காக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு டிராவிட் உறுதுணையாக இருந்தார். கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
