ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி-20 தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்கினர்.
இதையும் படிங்க – 2011 உலகக்கோப்பையில் தோனி பயன்படுத்திய பேட் எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?
யஷஸ்வி 27 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில் 49 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 66 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக 28 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)