01

மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையின் பலனைப் பெற்று வந்தனர். தற்போது இந்த திட்டத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் வகையில், இந்த திட்டத்தின் தொகையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு இருக்கும் நிலையில், இப்போது அது ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு மூன்று ஆண்டுகளுக்குள் எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
