முறுக்கு என்றாலே மணப்பாறை முறுக்கு தான் என எல்லோருக்குத் தெரியும். ஆனால் கைகளால் செய்யப்படும் ஆட்டையாம்பட்டி கைமுறுக்கு தனி சிறப்பு உண்டு சிறந்த சுவையும் உண்டு.
நாமக்கல் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு எல்லையில் அமைந்துள்ளது ஆட்டையாம்பட்டி இங்கு கைகளால் செய்யப்படும் கை முறுக்கு ஜெர்மனி துபாய் மலேசியா போன்ற நாடுகள் வரைக்குமே செல்கின்றது. இந்த முறுக்குக்கு மட்டும் ஏன் இவ்வளவு மவுசு என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கை முறுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான நொறுக்குத்தீனி வகைகளில் ஒன்று. இது கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆவலுடன் சாப்பிடப்படும் சுவையான ஒரு தின்பண்டமாகும்.
ஆட்டையாம்பட்டி பகுதிகளில் எங்கு சென்றாலும் பெட்டிக்கடைகள் போல திரும்பும் பக்கமில்லாமல் முறுக்கு கடையிலாகத் தான் . கோயம்புத்தூர், திருச்சி ,மதுரை, பெங்களூரு சென்னை வழியாக செல்லும் வாகனபிரியர்கள் இவ்வழியாக செல்லும்போது இந்த கடையில் நிக்காமல் செல்வதே இல்லை. ஏனென்றால் இந்த முறுக்கின் சுவை நாக்கை நடனமாட வைக்கும்.
இதையும் வாசிக்க: ரேசன் அட்டை பெறுவது ரொம்ப சிம்பிள்… இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க
ஆட்டையாம்பட்டி பகுதிகளில் மிகவும் ஃபேமஸான கந்தா கைமுறுக்கு கடையில் ஒரு நாளைக்கு 5,000 முதல் 7,000 வரை வருமானம் வருவதாக பூவராகவன் தெரிவித்தார். இவர் சுமார் 8 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் முருக்கு தட்டு வடை அதிரசம் போன்ற தின்பண்டகளை செய்து வியாபாரம் நடத்தி வருகிறார் . சரி இந்த முறுக்கினை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் முறுக்குக்கு தேவைப்படும் பொருட்களை பார்க்கலாம்..
அரிசி மாவு, கடலை மாவு, சீரகம், மிளகாய்த்தூள், வெண்ணெய், மற்றும் உப்பை ஒன்றாகக் கலந்து பின்னர், தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, மிருதுவான மாவாகக் குழைத்து, மாவை சிறிய பந்துகளாக உருட்டி, முறுக்கு செய்யும் வட்டக்கோலத்தின் உள்ளே வைத்து, எண்ணெயில் பொரிக்க. மிதமான சூட்டில், முறுக்குகளை பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து , எண்ணெய் வடிந்தவுடன், தாளிப்பதற்குரிய பாத்திரத்தில் எடுத்து வைத்து சிறிது நேரம் கழித்து உண்பதற்கு தகுதியான முறையாக ரெடியாகிறது.
இதையும் வாசிக்க: பேங்க் செக் இப்படி இருந்தா கேன்சல் ஆகலாம்… 99% பேருக்கு தெரியாத தகவல்
முறுக்குகள் எடுத்து வைப்பதற்குள் வாடிக்கையாளர்கள் உடனே வந்து வாங்கி செல்கின்றனர் என்றும் சேலம் நாமக்கல் வழியாகச் செல்லும் வாகன பிரியர்கள் இவ்வழியாகஒ. வரும்போது நிச்சயம் ஆட்டையாம்பட்டி முறுக்கை ருசி பார்க்காமல் செல்ல மாட்டார்கள் பூவராகவன் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
