போதிய மூலதனமும், போதிய வருமானமும் இல்லாமல் நிதி நிலை மோசமடைந்ததால், இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி முதல் சுமேர்பூர் மெர்க்கண்டைல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், ஜெய் பிரகாஷ் நாராயண் நகரி சககாரி வங்கி லிமிடெட், ஸ்ரீமகாலட்சுமி மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஹிரியூர் நகர் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை நகர கூட்டுறவு வங்கி மற்றும் பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
ரிசர்வ் வங்கி தற்போது மீண்டும் ஒரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கியின் நிதி நிலை மோசமடைந்தது. அந்த வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. போதிய வருமானத்தையோ அல்லது டெபாசிட்டுகளையோ ஈட்ட முடியவில்லை. அத்துடன் ஏற்கெனவே பணம் டெபாசிட் செய்தவர்களுக்கும் திருப்பிச் செலுத்த போதுமான பணமும் இல்லை.
இதையும் படிங்க:
ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து விவகாரம்…. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா!
இதையடுத்து, வங்கி செயல்பாடுகளை ஜூலை 5ஆம் தேதி மாலையுடன் நிறுத்துமாறு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி, உத்தரப் பிரதேச மாநில கூட்டுறவு சங்கங்களின் ஆணையர் மற்றும் பதிவாளர் ஆகியோர் வங்கி செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைப்பாளரை நியமிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
