காவல்துறை அல்லாத ஒருவர் சீருடை அணிந்தோ அல்லது சின்னத்தைப் பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றம் என்று காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கோ தனது காரை மட்டுமின்றி தனது பைக்கையும் அவ்வாறு அலங்கரித்துள்ளார். அவர் ஏற்கனவே டிக்டாக்கில் இது தொடர்பான வீடியோக்களை பதிவேற்றியுள்ளார்.
போலீஸ் வாகனம் போல இருந்தால், சாலையில் பாதுகாப்பாக ஓட்ட முடியும் என்றும் மற்றவர்கள் வழி விடுகின்றனர் என்றும் விசாரணையில் கூறினார்.

