சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் உடனடி சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் இப்போது 15 நிமிடங்களுக்குள் காணலாம்.
புதிதாக அறிமுகமாகி உள்ள புதிய தொலைமருத்துவச் சேவை உதவியுடன் 15 நிமிடங்களுக்குள் அவசரப் பிரிவில் உடனடி சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் மருத்துவரை அணுக முடியும்.அதனை சிங்கப்பூர் பொது மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினமும் சராசரியாக 300 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வருகை அளிக்கின்றனர்.
அவர்களில் 50 முதல் 70 நோயாளிகள் அவசரமற்ற தேவைகளுக்காக நாடுவதுண்டு.

