10
சீனா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றையொன்று தரைவழியாக இணைக்கும் வகையிலான பாரிய ரயில் பாதைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இத்திட்டம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இம் மூன்று நாடுகளதும் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மெய்நிகர் ஊடாக இவ்வைபவத்தில் கலந்து கொண்ட மூன்று நாடுகளது தலைவர்களும் ஐக்கியம் மற்றும் பகிரப்பட்ட நோக்கங்களை எடுத்துக்கூறினர். 1997 இல் முதன் முதலில் முன்மொழியப்பட்ட இத்திட்டம், நிதிக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப இடையூறுகள், புவிசார் அரசியல் சிக்கல்கள் காரணமாக தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

