ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தேவ்பிரகாஷ் மதுகர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 80 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி பெறப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை அனுமதித்ததே விபத்துக்கு காரணமாக காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
போலே பாபா கிளம்பும்போது அவரின் வாகனம் செல்ல ஏதுவாக வாயில்கதவுகள் அடைக்கப்பட்டதாகவும், சாமியாரின் காலை தொட்டு வணங்கவும், காலடி மண் எடுக்கவும் அதிகம் பேர் குவிந்ததும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியதாகவும், தடயங்களை அழிக்க முயற்சித்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே போலே பாபா தங்கியிருந்த இடத்தில் காவல்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு அவர் வசிக்கவில்லை என்பதும், தலைமறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர்மட்டக் குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் இருக்க வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் கூட்ட நெரிசல் சம்பவங்கள் குறித்த நிலை அறிக்கை சமர்பிக்க வேண்டும்என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
யார் இந்த போலே பாபா? ஹத்ராஸ் துயர சம்பவத்திற்கு காரணமான இந்த சாமியாரின் பின்னணி என்ன?
மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஹத்ராஸ் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் ஒரு பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
