சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கியிருந்த 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிக்கி கொண்டார்.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை விரைந்தன.
பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்ட நபரை நீரழுத்தக் கருவியின் உதவியுடன் மீட்டனர். அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் ஜூன் 30 அன்று நடந்ததாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ Singapore Road Accident முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

