தெற்கு பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா நகரில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் பட்டாசு கிடங்கில் வேலை செய்த ஊழியர்கள், கிடங்கில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் நான்கு வயது மகன் உட்பட ஐந்து பேர் இந்த விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த விபத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் உடல்நிலை மோசமாக உள்ளதாக நகர பேரிடர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த பயங்கர வெடி விபத்தால் 20 மீட்டர் பள்ளம் உருவாகியுள்ளது.
மேலும் சுவர்கள் உடைந்து,அருகே உள்ள குளிர்பான தொழிற்சாலை, தானியங்கள் மற்றும் மாவு கிடங்கு,அப்பகுதியில் உள்ள வீடுகள் உள்ளிட்டவைகள் இந்த வெடி விபத்தில் கடுமையாக சேதமடைந்தன.

