நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகள் முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் கேசி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளிக் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

