ஜோகூர் சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமை ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தும் முகநூல் பதிவு தொடர்பாக ஜோகூர் அரசு தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். “Kelab Penyokong PAS Malaysia” என்ற முகநூல் பதிவை விசாரித்து வருவதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் தெரிவித்தாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை அறிக்கையின் அடிப்படையில், டிஎம்ஜே என்று பிரபலமாக அறியப்பட்ட துங்கு இஸ்மாயில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஒரு பிரிவின் இயக்குநர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து 20 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகக் கூறியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது என்று குமார் கூறினார். தேச துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது மற்றும் பொதுமக்கள் பொறுப்பான சமூக ஊடக பயனர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் தளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்த வேண்டாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் கோத்தா திங்கி பண்டார் பெனாவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்றார்.
நேற்று, ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி, மாநில சுல்தானின் புகழை கெடுக்கும் எந்தவொரு தீங்கிழைக்கும் முயற்சியையும் தனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார். அந்த முகநூல் பதிவை “பொறுப்பற்ற, அவமரியாதை மற்றும் அவமதிப்பு” என்று விவரித்ததோடு மாநில அரசு காவல்துறை புகாரினை தாக்கல் செய்துள்ளது என்றார்.


