• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விவசாயிகளின் கவனத்திற்கு.!! ரூ.20 மதிப்பிலான இந்த செடியை வயல் ஓரத்தில் நட்டு வைத்தால் 6 வருடத்தில் பணக்காரர் ஆகலாம்.! 

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
விவசாயிகளின் கவனத்திற்கு.!! ரூ.20 மதிப்பிலான இந்த செடியை வயல் ஓரத்தில் நட்டு வைத்தால் 6 வருடத்தில் பணக்காரர் ஆகலாம்.! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பயிரிடப்படும் தாவரமாக பாப்லர் (poplar) இருக்கிறது. ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் பாப்லர் மரங்கள் பரவலாக பல நோக்கங்களுக்காக நடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

விவசாய நாடான இந்தியாவில் நெல், கோதுமை, கரும்பு போன்றவற்றைத் தவிர தோட்ட தாவரங்களையும் மக்கள் பயிரிடுகின்றனர். விவசாயிகள் தங்கள் விவசாய பயிர்களுடன் பாப்லர் மரங்களையும் நட்டால் கூடுதல் வருமானம் பெறலாம். கிரிஷி விக்யான் கேந்திரா, நியமத்பூரில் பணியாற்றும் வேளாண் நிபுணரான டாக்டர். என்.பி. குப்தா பேசுகையில், விவசாயிகள் கூடுதல் செலவு இல்லாமல் பாப்லர் செடிகளை வளர்க்கலாம் என்று கூறினார்.

விளம்பரம்

பொதுவாக பாப்லர் மரம் ப்ளைவுட், தீப்பெட்டிகள், பொம்மைகள், கூழ் காகிதம், பேக்கிங் கேஸ்கள் மற்றும் செயற்கை கால்கள் தயாரிக்க பயன்படுகிறது. விவசாயிகள் தங்கள் வயலின் முகடுகளில் பாப்லர் செடிகளை நட்டால், விவசாயிகள் அவற்றை பராமரிக்க கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை. மேலும் பாப்லர் செடிகள் வயலின் உள்ளே விளையும் பயிர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களிலிருந்து தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து கொள்ளும் என்றார்.

6 ஆண்டுகளில்…

வளமான பசலைமண் மற்றும் களிமண்ணில் பாப்லர் செடியை நடலாம் என்று டாக்டர் என்.பி.குப்தா கூறினார். இது நடப்படும்மண்ணில் கரிமச் சத்து அதிகமாக இருக்க வேண்டும். இது தாவரங்களின் நல்ல வளர்ச்சிக்கு உதவும். பாப்லர் செடிகளை6.5 முதல் 7.5 வரை pH உள்ள மண்ணில் நட வேண்டும். பாப்லர் செடி 6 முதல் 8 ஆண்டுகளில் தயாராகி, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தருகிறது.

விளம்பரம்

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்…

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாப்லர் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று டாக்டர் என்.பி.குப்தா குறிப்பிட்டார். வயலின் ஓரத்தில் பாப்லரை நட்டால் ஒவ்வொரு செடிக்குமான இடைவெளி 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். அதேசமயம் முழு வயலில் பாப்லர் செடிகள் நடப்பட்டால், செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 3 மீ ஆகவும், line-களுக்கு இடையே உள்ள தூரம் 4 மீ ஆகவும் இருக்க வேண்டும்.

பாப்லரின் சிறந்த வகைகள்…

விளம்பரம்

இதுகுறித்து டாக்டர் என்.பி.குப்தா கூறுகையில், பாப்லர் சாகுபடியில் இருந்து நல்ல விளைச்சல் பெற, அதன் ரகத்தை கவனிப்பது மிகவும் அவசியம். பாப்லர் நடவு செய்யும் போது விவசாயிகள் சிறந்த வகை செடிகளை மட்டுமே நட வேண்டும். இதன் பிரபலமான குளோன்களான G-3, G-48, L-34, L-51, L-74, L-188 மற்றும் L-247 நல்ல உற்பத்தியை கொடுக்கின்றன என்றார்.

நீர்ப்பாசனத்தில் சிறப்பு கவனம்:

பாப்லர் செடிகளை நட்ட முதல் வருடத்தில் நீர்ப்பாசனத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று குப்தா கூறினார்.செடியை நடவு செய்த உடனேயே நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். முதல் ஆண்டில் வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஆண்டில், 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும், மூன்றாம் ஆண்டில் தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

விளம்பரம்
தினமும் முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 9 அருமையான நன்மைகள்.!


தினமும் முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 9 அருமையான நன்மைகள்.!

அதே போல பாப்லர் செடிகளை அவ்வப்போது கத்தரிப்பது அவற்றின் நல்ல வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. செடியை நேராக இருக்க கூடுதலாக வெளியே வரும் கிளைகளை வெட்ட வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் கிளைகளை கத்தரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயல் முழுவதும் பாப்லர் செடிகளை நட்டால், ஊடுபயிராகவும் இதனை செய்யலாம் என்று டாக்டர் குப்தா கூறினார். பாப்லர் இலைகள் குளிர்காலத்தில் விழும், இத்தகைய சூழ்நிலையில், கோதுமை, ஓட்ஸ், பேரீச்சம்பழம், கடுகு மற்றும் பருவகால காய்கறிகளை செடிகளுக்கு இடையில் உள்ள காலி இடத்தில் பயிரிடலாம். இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரும் என்றார்.

விளம்பரம்

இதையும் வாசிக்க : அதிக லாபம் தரும் குண்டு மல்லி சாகுபடி…அசத்தும் விழுப்புரம் விவசாயிகள்

.

Read More

Previous Post

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு

Next Post

IND vs SA Final: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..! ரிசர்வ் நாள், சூப்பர் ஓவர் விதிமுறை என்ன? முழு விவரம்

Next Post
IND vs SA Final: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..! ரிசர்வ் நாள், சூப்பர் ஓவர் விதிமுறை என்ன? முழு விவரம்

IND vs SA Final: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..! ரிசர்வ் நாள், சூப்பர் ஓவர் விதிமுறை என்ன? முழு விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin