சிபிஐ காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விடுவிக்கக் கோரி தில்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் முன்வைத்ததால் கேஜரிவாலின் ஜாமீனை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில் கேஜரிவாலை விடுதலை செய்யக் கோரி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஒன்றுகூடி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

