ஜே.வி.பி கட்சியின் தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு எமது கட்சிக்கு ஆரம்பத்தில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் மக்களை சுடுவதற்கு நான் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியில் தலைவர் கருத்து வெளியிட்ட போது ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு மக்களை அச்சுறுத்துவதாகச் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் வழங்கும் வகையில் இன்று (28) மட்டக்களப்பில் இடம்பெற்ற வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்கு தலை சரியில்லை. அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை சுடுவதற்கு நான் ஆயுதம் கொடுக்கவில்லை. அவர் மட்டக்களப்புக்கு வந்தால் பொறுப்புடன் கதைக்கப் பழகவேண்டும்.
அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும். அவர் மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய ஒரு கட்சி தான் அவரின் கட்சி. நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்கபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இணைந்து பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளத்துடன், மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற முடியவில்லை. இதுவரையிலும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவில்லை என்பதோடு இது சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளேன்.
விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெறவேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்
The post ஆரம்பத்தில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ஜே.வி.பி கட்சிதான் appeared first on Thinakaran.


