இதற்கு பதில் அளித்து பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு, வட சென்னை வளர்ச்சியில் முதலமைச்சர் தலைமையிலான அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. எனவேதான் வட சென்னை வளர்ச்சிக்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னை, மதுரை மட்டுமின்றி, கோவை, திருச்சி, சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை முதல்வர் அறிவித்து உள்ளார். முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, எதிர்காலத்தில் உரிய வகையில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

