பிரேசில்(Brazil) நாட்டவரான எதிர்காலத்தைக் கணிக்கும் வாழும் நாஸ்ட்ரடாமஸ் இதுவரை கணித்துள்ள விடயங்கள் நடந்துள்ள நிலையில் அவரின் மற்றுமொரு கணிப்பும் தற்போது நடந்துள்ளது.
பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé,) , எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல், எலான் மஸ்க்(Elon Musk) ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர்,
சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார்.
எனவே, அவர் இதுவரை கணித்திருந்த பல கணிப்புகள் நிறைவேறியுள்ள நிலையில், விண்வெளியில் நடக்கவிருக்கும் சில விடயங்கள் குறித்தும் கணித்திருந்தார்.
நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
இந்தவகையில் தற்போது அந்த கணிப்பும் நிறைவேறியுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் சில பொருட்கள் பூமிக்கருகில் பறந்துவரும் என கணித்திருந்தார்.
ஆனால், அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் தெரிவித்திருந்தார்.தற்போது, அவரது கணிப்பு துல்லியமாக நிறைவேறியுள்ளது.
பெரிய கோள்
Asteroid 2024 Mk என்னும் சிறுகோள் இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 16ஆம் திகதி கண்டறியப்பட்டது, அது 29ஆம் திகதி பூமிக்கருகில் கடந்து செல்ல உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 99 சதவிகித சிறுகோள்களையும் விட இந்த கோள் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

