உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி போட்டியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை காலை 6 மணிக்கு வெஸ்ட் இண்டீசின் டிரினிடாடில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியதை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.
இந்நிலையில் இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
மொபைல் ஆப்-ல் hotstar-ல் ரசிகர்கள் இதனை பார்த்து மகிழலாம். இதுவரை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2 முறை மட்டுமே மோதி உள்ளன. இவ்விரு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் இந்த முறை வலுவான ஆஸ்திரேலியாவையே சூப்பர் 8 சுற்றில் வீழ்த்திய உற்சாகத்துடன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்த போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டி நடைபெறக்கூடிய டிரினிடாட் பிரைன் லாரா மைதானத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லேசான தூறல்கள் விழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தென்னாபிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் ஓரளவு செம பலத்துடன் காணப்படுவதால் நாளைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க – இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது… ஏன் தெரியுமா?
இதேபோன்று சர்வதேச அரங்கில் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி, இந்த முறை ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இந்த போட்டியை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதி போட்டி நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
