பறவைக்காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரத்தில் இருந்து ஒரு சில ஊழியர்களுக்கு போட பின்லந்து திட்டமிட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இந்த தடுப்பூசியை கால்நடைகளுடன் தொடர்பு உடையவர்களுக்கு முதலில் போடுவதாக தெரிவித்தனர்.
பறவை காய்ச்சல் தடுப்பூசியை மனிதர்களுக்கு பயன்படுத்திய முதல் நாடாக பின்லந்து இருக்கும்.இதுவரை குறைந்தது பத்தாயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு போடப்படும்.
உலகம் முழுவதும் H5N1 பறவை காய்ச்சல் காரணமாக மில்லியன் கணக்கான பறவைகள் இறந்துள்ளன.
மேலும் பாலூட்டி விலங்குகளுக்கும் பரவுகிறது.

