குவாந்தான்:
நாளை (ஜூன் 24) காலை 9 மணி முதல் 5 மணி வரை குவாந்தான் மாவட்டத்தின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தடை ஏற்படும் என்று, பினாங்கு நீர் வழங்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் மாநில தலைநகரில் உள்ள பல பகுதிகளில் மொத்தம் 55,000 வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதிக்கப்படும் என்று, Pengurusan Air Pahang Bhd (Paip) எனபடும் நீர் வழங்கல் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் நூர் இஸ்வான் பஹுடின் கூறினார்.
பஞ்சிங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட Tenaga Nasional Bhd மின் கேபிள் பழுது காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனவே நீர் விநியோக தடையின்போது நுகர்வோர் போதுமான தண்ணீரை வைத்திருக்கவும், நீரைக்பிகவனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று இன்றுன்வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையையில் அவர் தெரிவித்தார்.


