தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கட்டளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் குமாரின் மகன் ஆதி மகேந்திரன். ஆதி மகேந்திரன்தடகளப் போட்டியில் ஆர்வம் கொண்ட நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் கேரள, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல் பல்வேறு மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்திலிருந்து மாணவர் ஆதி மகேந்திரன் கலந்து கொண்டுள்ளார். இதில் 3ஆயிரம் மீட்டர்தடகள போட்டி பிரிவில் பங்கேற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்றுமாணவன் ஆதி மகேந்திரனை ஊர் திரும்பிய நிலையில், தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் மாணவன் ஆதிமகேந்திரனுக்கு இனிப்பு வழங்கி மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, உற்சாகஊர்வலமாக அழைத்துச் சென்று தங்களுது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
