உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் 20 அணிகள் மோதின. அவற்றிலிரந்து சூப்பர்8 பிரிவில் விளையாட 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த எட்டு அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-இல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளது. குரூப் 2-ல் தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
சூப்பர் 8 பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை மோதும். இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
குரூப் 1 பிரிவில் இந்திய அணி இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி, இன்று வெஸ்ட் இண்டீசின் ஆண்டிகுவா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளும். இன்றைய போட்டி நடைபெறும் இடத்தில் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும் என்றும், மழை பெய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலும், மொபைல் ஆப்பில் ஹாட்ஸ்டாரிலும், பார்த்து மகிழலாம். இதுவரை இரு அணிகளும் 13 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12 முறையும் வங்கதேசம் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)