கொழும்பு – புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 58 வயதான மன்னர் மன்னன் என்ற நபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி முதல் 8 மாதங்களாக காணவில்லை என அவரது மனைவி ராணி மன்னர் தெரிவிக்கின்றார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி தன்னை தனது சகோதரியின் வீட்டில் விட்டு சென்றதை அடுத்தே, தனது கணவர் காணாமல் போனதாக அவரது மனைவி புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்தால், தமக்கு அறிவிக்குமாறும் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார். R


&w=1200&resize=1200,675&ssl=1)