இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 52 வயதாகும் டேவிட் ஜான்சன் பெங்களூருவில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே பொருளாதார சிக்கல்கள் இருந்துள்ளன. அதிலிருந்து மீள்வதற்காக நண்பர்கள் சிலர் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டிலிருந்து நோய்வாய்ப்பட்ட டேவிட் ஜான்சன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பாக தான் அவர் வீடு திரும்பி இருக்கிறார். அவர் மன உளைச்சலாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில அவர் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் திறமையான ஆட்டத்தை டேவிட் ஜான்சன் வெளிப்படுத்தினார். 1996-ல் ரஞ்சிக்கோப்பையை கர்நாடக அணி கைப்பற்றியது.
அந்த தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜான்சன் ஒட்டுமொத்தமாக 23 விக்கெட்டுகளை எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்றார். இதையடுத்து அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
அந்தப் போட்டியில் தான் வீசிய முதல் ஓவேரிலேயே 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்திய கிரிக்கெட் அணியில் எவரும் இந்த வேகத்தில் பந்து வீசவில்லை. இதன் பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த அவர் ரஞ்சிக்கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக சில ஆண்டுகள் விளையாடினார்.
2009க்கு பின்னர் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டேவிட் ஜான்சன் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
