100 ரூபாய்க்கும் குறைவான பேமெண்ட்கள் அல்லது 500 ரூபாய்க்கும் குறைவான தொகையை பெறுவது சம்பந்தப்பட்ட UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான SMS அலர்ட்டுகளை நிறுத்தப் போவதாக HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
HDFC வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜூன் 25ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இந்த தேதியிலிருந்து 100 ரூபாய்க்கும் அதிகமான தொகை (அனுப்பிய அல்லது செலுத்தப்பட்ட பணம்) மற்றும் 500 ரூபாய்க்கும் அதிகமான (பெறப்பட்ட பணம்) போன்ற ட்ரான்ஸ்ஷாக்ஷன்களுக்கு மட்டுமே SMS நோட்டிஃபிகேஷன்களை பெறுவீர்கள்.
அதிக எண்ணிக்கையிலான மெசேஜ்களை அனுப்புவதால் ஏற்படக்கூடிய பெரிய அளவு செலவை குறைப்பதன் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த SMS அனுப்புவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு வங்கிகள் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் தினமும் அதிக அளவிலான UPI ட்ரான்ஷாக்ஷன்கள், அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் அளவில் செய்யப்படுகிறது.
மேலும் அனைத்து டிரான்ஸாக்ஷன்களுக்கான இமெயில் அலர்ட்டுகள் தொடர்ந்து அனைவருக்கும் அனுப்பப்படும் என்பதையும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் பெறுவதற்கு கஸ்டமர்கள் தங்களுடைய முதன்மை மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்யுமாறு தனியார் லெண்டர்களிடம் வங்கி கூறியுள்ளது. குறைந்த மதிப்பு கொண்ட டிரான்ஸாக்ஷன் சம்பந்தமாக பெறப்பட்ட ஃபீட்பேக் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது. UPI டிரான்ஸாக்ஷன் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் மூலமாகவும் அலர்ட்டுகள் பெறப்படும் என்பதை HDFC வங்கி கூறியுள்ளது.
இதையும் படிக்க:
இந்த நாட்டில் குடியேற ஆர்வம் காட்டும் 4000 இந்திய கோடீஸ்வரர்கள்… ஏன் தெரியுமா?
UPI ட்ரான்ஸாக்ஷன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இந்தியாவில் ஏப்ரல் 11, 2016 அன்று RBI கவர்னர் டாக்டர். ரகுராம் ஜி ராஜன் அவர்களால் மும்பையில் UPI அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் UPI டிரான்ஸாக்ஷன் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் 11,768 கோடியை அடைந்ததை அடுத்து UPI கிட்டத்தட்ட 60% அதிகரிப்பை பதிவு செய்தது.
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட சமீபத்திய தகவலின் அடிப்படையில், ஏப்ரல் மாதத்தில் UPI ட்ரான்ஸாக்ஷன்கள் 1,330 கோடியை அடைந்துள்ளது. Walmartற்கு சொந்தமான PhonePe, Google Pay மற்றும் Paytm போன்றவை பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் UPI அப்ளிகேஷன்கள். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மூன்று அப்ளிகேஷன்கள் மூலமாக செய்யப்படும் UPI ட்ரான்ஸ்ஷாக்ஷன் மட்டுமே இந்தியாவின் 96 சதவீத UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு பங்களிக்கிறது.
இதையும் படிக்க:
பங்குச் சந்தையில் ராக்கெட் வேகம்… மைக்ரோசாப்ட், ஆப்பிளை ஓடவிட்ட என்விடியா!
UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான சராசரி டிக்கெட் அளவு (ATS) 8 சதவீதம் குறைந்து 1,648 ரூபாயிலிருந்து 1,515 ரூபாயாக மாறி உள்ளது. சராசரி டிக்கெட் அளவு என்பது ஒரு கஸ்டமர் ஒரு சந்திப்பில் செலவிடும் சராசரி தொகை.
.
&w=750&resize=750,375&ssl=1)
