சூர்யகுமார் யாதவின் அதிரடி அரை சதத்தின் உதவியோடு, ஆப்கனுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்து அணியும் வென்றன. இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்படாஸில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் ஆப்கன் அணி வீரர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் குறைந்த வேகத்தில் இந்திய அணி ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களும், விராட் கோலி 24 ரன்களும், ரிஷப் பந்த் 20 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். சிவம் துபே 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 24 பந்துகளில் 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கன் அணி தரப்பில் பசல்ஹக், நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)