The post பாண்டான் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சோலார் பேனல்களை உருவாக்க குத்தகை அறிவிப்பு!! appeared first on SG Tamilan.
சிங்கப்பூர்:பாண்டன் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சோலார் பேனல்களை உருவாக்க தேசிய நீர்நிலையான PUB குத்தகைக்கு அறிவித்துள்ளது.
இது PUB இன் 2வது பெரிய மிதக்கும் சோலார் பேனல்களைப் பொருத்தும் திட்டமாகும்.
முன்னதாக 2021 ஆம் ஆண்டில், தெங்கா நீர்த்தேக்கத்தில் பெரிய அளவிலான மிதக்கும் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டன.
மிதக்கும் சோலார் பேனல்கள் பிளாஸ்டிக் மிதவைகளுடன் சோலார் பேனல்களை இணைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ள ஒரு அமைப்பு ஆகும்.
இவை தண்ணீரில் மிதக்கும் வகையில் பொருத்தப்படுகின்றன.
கடல்சார் தொழில்நுட்பங்களை இவ்வாறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரத்தை தயாரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.
நீருக்கு அடியில் உள்ள கம்பிகளின் மூலம் மின்சாரமானது ஒரு டிரான்ஸ்மிஷன் டவருக்கு அனுப்பப்படுவதால் மின்சாரம் தேக்கி வைக்கப்படுகிறது.
மிதக்கும் சோலார் பேனல்கள் பாண்டன் நீர்த்தேக்கத்தின் 22 சதவீதத்தை உள்ளடக்குகிறது. மேலும் இப்பணியானது 2028க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சோலார் பேனல்கள் 16,000 நான்கு அறைகள் கொண்ட கழக வீடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்
சோலார் பேனல்கள் கரிம உமிழ்வை ஆண்டுக்கு 27 கிலோடன்கள் குறைக்க உதவுகின்றன. இது கிட்டத்தட்ட 5,800 கார்களின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கு சமம்.
Follow us on : click here
The post பாண்டான் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சோலார் பேனல்களை உருவாக்க குத்தகை அறிவிப்பு!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin