அப்படிப்பட்ட ஒரு அடித்தளத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது சிங்கப்பூரின் தேசிய கலைக்கூடம் மற்றும் Families of Life இயக்கம்.
இவ்விரு இயக்கமும் சேர்ந்த நடத்தும் புதிய கற்றல் திட்டத்தில் பாலர் குழந்தைகள் குடும்ப மதிப்புகளை அறிந்து கொள்கின்றனர்.
நான்கு முதல் ஆறு வயது வரையிலான மாணவர்கள் தேசிய கலை சேகரிப்புகளை ஆராய்ந்து அவற்றை தங்கள் சொந்த குடும்ப அனுபவங்களுடன் ஒப்பிடலாம்.
குடும்பப் பிணைப்பு, அர்ப்பணிப்பு, அன்பு மற்றும் அரவணைப்பு போன்ற குணங்களை வளர்க்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இத்திட்டம் 2026 வரை தொடரும். இதில் இதுவரை 3,000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

