தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாது என்று, முன்னாள் வீரர்கள் சொயப் அக்தர் உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி நேடிரயாக 2026 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதற்கு ஐசிசி ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளே காரணம் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து உடனான போட்டியை தவிர்த்து, இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இதனால் அந்நாட்டு ரசிகர்களுடன் முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தியடைந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அந்த அணி 2026 உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெறாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், ஐசிசி ஏற்படுத்தியுள்ள விதிகள் காரணமாக பாகிஸ்தான் அணி எந்த சிரமமும் படாமல் 2026 உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி விதிப்படி போட்டி நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளன. அத்துடன் சூப்பர் 8 பிரிவில் தற்போது விளையாடும் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
இவற்றுடன் மொத்த அணிகளின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. இதனுடன் 3 அணிகள், 2024 ஜூன் 30 ஆம் தேதி அன்று, ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற அணி தகுதி பெறும். இதன் அடிப்படையில் நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மீதம் உள்ள 8 அணிகள் தகுதிப் போட்டி மூலமாக 2026 உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதி பெறும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
