சிங்கப்பூர்: இளம் வயதிலேயே தமிழ் மொழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறுவர் கதை நேரம்’ எனும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் காணொளி கதைகளை தயாரித்துள்ளது கற்றல் வளங்களை மேம்படுத்த அது உதவும்.
இந்த புதிய முயற்சியை ABCs of tamil நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த முயற்சி இரு மொழி கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
siruvarkathaineram.com இணையதளத்தில் கண்களை பறிக்கும் காட்சிகள், கவனத்தை ஈர்க்கக்கூடிய விளக்கங்களுடன் சிறுவர்களை கவரும் வண்ணம் கதைகள் உள்ளன.
இந்த இணையதளமானது இரண்டு முதல் ஒன்பது வயதுகளுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

