• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PM கிசான் யோஜனா 2024: வங்கிக் கணக்கில் தவணை பணம் வரவில்லையா?

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
PM கிசான் யோஜனா 2024: வங்கிக் கணக்கில் தவணை பணம் வரவில்லையா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17-வது தவணைக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையில் பிஎம் கிசான் திட்டத்தின் தவணைப் பணம் நிறைய பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது, இது 2,000 ரூபாய் ஆகப் பிரித்து மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவிக்கு திரும்பிய முதல் நாளில், வரவிருக்கும் தவணையை வழங்குவதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இருப்பினும், அதிகாரப்பூர்வமாக தவணை பணம் வெளியிடப்பட்ட பிறகும், தவணைப் பணம் நிறையப் பேருக்கு வரவில்லை என்று புகார் எழுந்து வருகிறது. அப்படியானால், அவர்கள் எப்படி புகார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பிரதமர் கிசான் FAQகளின்படி, குறிப்பிட்ட 4-மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநில/UT அரசாங்கங்களால் பிரதமர் கிசான் போர்ட்டலில் விவசாயிகள் அப்லோட் செய்யப்பட வேண்டும். பதிவேற்றப்பட்ட அந்த 4-மாதத்தில் இருந்து அந்த காலத்திற்கான பலனைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இருப்பினும் தவணை பணம் கிடைக்கவில்லை என்றால், தாமதத்திற்கான காரணம் கண்டறிந்து தீர்க்கப்பட்டவுடன், தகுதியான விவசாயிகள், உரிய பலன்களை பெறுவார்கள்.

விளம்பரம்

உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை சரிபார்க்க, அரசாங்கத்தின் இணையதளத்தில் உள்ள விவசாயிகள் பிரிவுக்குச் செல்லலாம். அங்கு, உங்கள் மாநிலம், மாவட்டம், தாலுகா தொகுதி மற்றும் கிராமத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் ஒரு அறிக்கையைப் பெற கிளிக் செய்க. உங்கள் கிராமத்தில் இன்று பணம் பெறும் அனைத்து விவசாயிகளின் பட்டியலை இந்த அறிக்கை காண்பிக்கும். பட்டியலில் உங்கள் பெயரைக் காணவில்லை என்றால், நீங்கள் பணத்தைப் பெற வேண்டும் என்று நினைத்தால், உதவியைப் பெற PM கிசான் திட்டத்திற்கான ஹெல்ப்லைனை அழைக்கலாம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அமுல் பாலகம் தொடங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்? – சுயதொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்

இருப்பினும், புகாரை தாக்கல் செய்வதற்கு முன், பட்டியலில் உள்ள தங்கள் பெயரை யூசர்கள் சரிபார்க்க வேண்டும். பட்டியலில் பெயரை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

PM கிசான் யோஜனா: beneficiary பட்டியல்

பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க விரும்பினால் பின்பற்ற வேண்டிய வழிமுறை இதோ:

படி 1: பிரதமர் கிசான் யோஜனா – pmkisan.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

விளம்பரம்

படி 2: ஹோம் பேஜில் உள்ள Beneficiary Status-ஐ கிளிக் செய்யவும்.

படி 3: ஆதார் எண், கணக்கு எண் அல்லது மொபைல் எண் – இதில் ஏதாவது ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

படி 4: ‘கெட் டேட்டா’ என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: பயனாளிகள் இப்போது டேட்டாவை பார்க்கலாம்.

ஒரு விவசாயி, அவரது பெயர் பட்டியலில் இருந்தும் பணம் பெறவில்லை என்றால், புகார் அளிக்கும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

இதையும் படிக்க:
உலகின் டாப் 10 உலர் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா?

விளம்பரம்

PM கிசான் யோஜனா: புகார் பதிவு

புகாரை பதிவு செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது மின்னஞ்சல் செய்யலாம்

மின்னஞ்சல்: pmkisan-ict@gov.in மற்றும் pmkisan-funds@gov.in
உதவி எண்: 011-24300606, 155261
கட்டணமில்லா எண்: 1800-115-526

.

Read More

Previous Post

சேலஞ்சர் டென்னிஸ்: இறுதி சுற்றில் சுமித் நாகல் | Challenger Tennis Sumit Nagal in final round

Next Post

Pakistan Team: “நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!” – அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் | Babar Azam about Pakistan’s early T20 World Cup exit

Next Post
Pakistan Team: “நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!” – அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் | Babar Azam about Pakistan’s early T20 World Cup exit

Pakistan Team: "நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!" - அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் | Babar Azam about Pakistan's early T20 World Cup exit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin