கவுதம் காம்பிர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் ‘சுவர்’ என புகழப்படுபவருமான ராகுல் டிராவிட் உள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பை தொடருடன், அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.
அதன்படி, பலகட்ட தேடுதலுக்கு பின்னர் இந்திய அணி முன்னாள் வீரர் கவுதம் காம்பிரை பயிற்சியாளராக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 1 ரன் அல்லது 1 விக்கெட் கூட எடுக்காத சிஎஸ்கே ஆல்ரவுண்டர்… யார் தெரியுமா?
தனது தலைமையின் கீழ் பேட்டிங், பெளலிங் மற்றும் ஃபீல்டிங்குக்கான பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் கவுதம் காம்பிர் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2007ஆம் ஆண்டு இருபது ஓவர் உலக கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த காம்பிர், இந்தியாவுக்காக பல போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல்-இல் இவரது கேப்டன்ஸியில் இருமுறையும், ஆலோசகராக ஒரு முறையும் கே.கே.ஆர் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
