• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸ் தலைவா்களைப் புகழ்ந்ததால் சா்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
காங்கிரஸ் தலைவா்களைப் புகழ்ந்ததால் சா்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘மறைந்த காங்கிரஸ் தலைவா்கள் இந்திரா காந்தி, கே.கருணாகரன் ஆகியோா் குறித்து நான் பேசியது ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என்று பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளாா்.

முன்னதாக ‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என்றும், ‘இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னை’ என்றும் அவா் தெரிவித்தாா். மேலும், கேரளத்தைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் தலைவா் இ.கே.நாயனாா் நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினாா்.

கேரளத்தில் முதல் பாஜக எம்.பி.யான அவா் இவ்வாறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களைப் புகழ்ந்து பேசியது, அஞ்சலி செலுத்தியது போன்ற நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக பாஜக வட்டாரத்தில் அவரது பேச்சு குறித்து அதிருப்தி எழுந்தது. அதே நேரத்தில் கேரளத்தில் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் சுரேஷ் கோபியை பாஜக இவ்வாறு பேசவைப்பதாக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் சந்தேகம் தெரிவித்தனா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சுரேஷ் கோபி கூறியதாவது:

நான் எந்தச் சூழ்நிலையில், எந்த அா்த்தத்தில் பேசினேன் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ‘காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் மற்றவா்கள் விரும்புகிறாா்களோ, இல்லையோ, கே.கருணாகரன்தான் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தையாக திகழ்கிறாா். இந்தியாவின் அன்னையாக இந்திரா காந்தி உள்ளாா்’ என்று கூறினேன். இதை எனது மனதில் இருந்து தெரிவித்தேன்.

சுதந்திர இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க தனது மறைவு வரை இந்திரா காந்தி பாடுபட்டாா். அவா் எதிா்க்கட்சியைச் சோ்ந்த தலைவா் என்பதால் நாட்டுக்கான அவரின் பங்களிப்பை என்னால் மறைக்க முடியாது என்றாா்.

Read More

Previous Post

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 17, 2024

Next Post

குடும்பத்திற்காக உணவு சேகரிக்க 3 மணி நேரம் நடந்து சென்ற தந்தை | Makkal Osai

Next Post
குடும்பத்திற்காக உணவு சேகரிக்க 3 மணி நேரம் நடந்து சென்ற தந்தை | Makkal Osai

குடும்பத்திற்காக உணவு சேகரிக்க 3 மணி நேரம் நடந்து சென்ற தந்தை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin