• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை…’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்பில்லை…’ – மறைமுகமாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது சவுரவ் கங்குலி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. ப்ளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் நிலையில் தரவரிசை பட்டியலில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்றாம் இடத்திலும், சென்னை அணி நான்காம் இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

அடுத்த 2 இடங்களில் டெல்லி மற்றும் லக்னோ அணி உள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் இன்னும் சுமார் 10 போட்டிகள் மீதமுள்ளன. கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.

கடைசி மூன்று இடங்களில் இருக்கும் அணிகளில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் தொடரிலிருந்து வெளியேறி விட்டன. இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் குஜராத் அணியும் அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விடும்.

விளம்பரம்

இந்நிலையில் ப்ளே ஆஃப் சுற்று குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் இயக்குனருமான சவுரவ் கங்குலி கூறியதாவது- என்னை பொறுத்த அளவில் தற்போது பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகளில் 4 அணிகள் முன்னேறும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு என்று நினைக்கிறேன். அடுத்த 10 நாட்கள் ஒவ்வொரு அணிகளுக்கும் மிக முக்கியமான நாட்களாக அமையும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. போட்டி நடைபெறும் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன. ஒரு காலி இருக்கையை கூட பார்க்க முடியவில்லை. உலக தரம் வாய்ந்த தொடராக ஐபிஎல் மாறி வருகிறது என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

தரவரிசையில் பெங்களூரு அணி 7 ஆம் இடத்தில் உள்ள நிலையில் முதல் 6 இடங்களில் உள்ளவற்றில் 4 அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் செல்லும் என்று கூறியுள்ளார் கங்குலி.

.

Read More

Previous Post

பிரதமா் மோடி ஜூன் 18-இல் வாரணாசி பயணம்: விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்கிறாா்

Next Post

உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு | Domestic Air Travel Surges in May, Reveals DGCA

Next Post
உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு | Domestic Air Travel Surges in May, Reveals DGCA

உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு | Domestic Air Travel Surges in May, Reveals DGCA

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin