ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவர் முதலே அதிரடியாக விளையாடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்ஷன் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களத்தில் இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே சிக்சரும் பவுண்டரியுமாக அடித்ததால் ஸ்கோர் எகிறியது. இந்த இணையை பிரிக்க 6 பவுலர்களை சென்னை அணி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
51 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் சாய் சுதர்ஷன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 55 பந்துகளில் 6 சிக்சர் 9 பவுண்டரியுடன் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவ்விரு வீரர்களின் விக்கெட்டையும் சென்னை அணியின் துஷார் தேஷ் பாண்டே கைப்பற்றினார்.
15 ஓவர்களில் ரன் எகிறினாலும், கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசிய சென்னை அணியின் பவுலர்கள் வெறும் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். தற்போது 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
