குரூப் ஏ பிரிவில் இந்தியா, யுஎஸ்ஏ அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. அத்துடன் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் வாய்ப்பை பெறுவார்கள் எனவும், பார்மல் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலி தனது பார்மை மீட்டெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை.

