சிபு:
நேற்றிரவு மிரி நகரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுவாய், நியா பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு அருகே கார் திடீரென தீப்பிடித்ததில் முதியவர் ஒருவர் உடல் கருகி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
இறந்தவர் பண்டார் பாரு பெர்மிஜயா, மிரியைச் சேர்ந்த 63 வயதான சென் கியான் சியோங் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இரவு 11.05 மணியளவில் இந்த சம்பவம் குறித்து திணைக்களத்திற்கு அழைப்பு வந்ததாகவும், உடனே பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் சொன்னார்.
“இந்தச் சம்பவத்தில் ஒரு புரோத்தோன் வீரா ஏரோபேக் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அது தீயினால் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
தீயணைப்பு வீரர்கள் குறித்த காரை சோதனையிட்டதில், காரின் இருக்கையில் பலியானவரின் உடலைக் கண்டுபிடித்தனர், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


