அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது, பாதுகாப்பை மீறி ஆடுகளத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்தார்.
தோனியை நோக்கி ஓடிய அவர், தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அவரிடம் விளையாட்டு காட்டிய தோனி, அரவணைத்தபடி அழைத்துச் சென்றார்.
மேலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
காவல்துறை விசாரணையில், அத்துமீறிய இளைஞர் கல்லூரி மாணவரான ஜெயக்குமார் ஜானி என்பதும், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ரபாரிகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
பாதுகாப்பை மீறியதாக அந்த ரசிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜெயக்குமார் ஜானி கைது செய்யப்பட்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
