நாடளாவியரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கைக்காக பணி புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்தனர்.
பணி புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்கக் கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் சுகவீன விடுமுறை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நன்மைகருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும் பதிவு தபால் ஒப்படைக்கும் பிரிவு மாத்திரம் இயங்கியது.
இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுபட்டனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)